தெய்வங்களின் சிலைகளை உலோகத்தில் வடிவமைக்கும் தாராசுரம் ரவிசங்கர்.


உலகத்தில் மனிதன் தோன்றியது முதல் கடவுள் வழிபாடு என்பது தொன்று தொட்டு இருந்து வருகிறது கடவுளால் உருவாக்கப்பட்டதே இந்த உலகம் என்பதற்கு பல உண்மை நிகழ்வுகள் உள்ளது ராமாயணம மகாபாரதம் சிவன் விஷ்ணு சைவம் வைணவம் என்ற பல விபரங்களை நாம் உலகம் தோன்றியது முதல் நடந்து கொண்டே இருக்கிறது இந்நிலையில் உருவ வழிபாட்டில் பல தெய்வங்களின் உருவங்கள் நாம் வழிபாடு செய்கிறோம்




 சிவன் பெருமாள் விநாயகர் முருகன் அய்யனார் காளி கருப்பர் ஆஞ்சநேயர் சக்கரத்தாழ்வார் கருடாழ்வார்,நரசிம்மர்,மாரியம்மன் என பல தெய்வங்களை வழிபாடு செய்கிறோம் இதில் ஒவ்வொரு தெய்வங்களுக்கும் ஒரு வடிவம் ஒரு அமைப்பு அதன் திருக்கரங்களில் ஒரு ஆயுதம் அமைப்பு வேறு படுகிறது.இறைவனின் அமைப்பு என்பது புராண காலங்களில் உள்ள அமைப்பினை ஒட்டியே அமைக்கப்பட்டால் மட்டுமே பார்ப்பதற்கு அருள்பாலிப்பது போன்றும் வழிபாட்டிற்கு உகந்ததாகவும் இருக்கும்




இந்நிலையில் இந்த அரிய இறை பணியை கும்பகோணம் அருகில் உள்ள தாராசுரத்தில் உள்ள ஸ்ரீ துர்காதேவி சிற்பசாலையில் ராமசந்திரன் மகன் ரவிசங்கர்(46) தனது 9 வயதில் இருந்தே தொழில் கற்று செய்து வருவதாக தெரிவித்தார் இவர் கும்பகோணத்தை சேர்ந்த தேசிய விருது பெற்ற  ராமசாமி ஸ்தபதி வாரிசுகளிடம் முறையாக தொழில் கற்று அதன் பின்னர் இந்த தொழிலை செய்து வருவதாக தெரிவித்தார்.















இவர்  சுவாமியின் திருவுருவங்கள் அதற்குரிய வாகனம் சுவாமி உருவம் திருவாச்சி கொடிமரம் கலசம் கோபுரவேலைகள்  ஆகிவற்றினை தாமிரம் பித்தளை போன்ற உயர்ரக உலோகத்தினால்   செய்து வருவதாக தெரிவித்தார். மேலும் இவர் செய்த சுவாமி வடிவங்கள் வாகனங்கள் பல ஊர்களுக்கு செய்து அனுப்பி வருவதாகவும் தொடர்ந்து இறைவன் அருளால் அனுப்புவதாகவும் தெரிவித்தார்.இறைவனின் திருவுரும் செய்யும் இவரை நாம் பாராட்டுவோம் 

தொடர்புக்கு ரா.ரவிசங்கர் 93443 02438    94422 09975  0435 241 6638


          ஸ்ரீ துர்கா தேவி சிற்பசாலை......படுகை...தாராசுரம்...கும்பகோணம்
 தஞ்சாவூர் மாவட்டம்
                 

கருத்துகள்