தஞ்சை மாவட்டம் தென்குடிதிட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்

தஞ்சை மாவட்டம்

தென்குடிதிட்டை வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்

 

வசிஷ்டேஸ்வரர்என்ற பெயர் வந்ததற்கு காரணம் மஹரிஷி வசிஷ்டர் இங்கு தவம் செய்தார், சிவனை வழிபட்டார் என்ற காரணத்தால் சிவ பெருமான் வசிஷ்டேஸ்வரர் என்ற திருநாமத்தில் வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.

இந்தக் கோவில் சோழர் ஆட்சிக் காலத்தில், 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் இறைவன் சுயம்புவாக அருள்புரிகிறார்.

மஹா புரளயம்  என்னும் காலத்தில், பூமி முழுவதும் வெள்ளத்தில் மூழ்கிய போதும், திட்டை  ஒரே இடமாக மூழ்காமல் இருந்தது. அந்த திடத்தில் சிவலிங்கம் இருந்தது இக்கோயிலில் பிரம்மா விஷ்ணு வழிபட்டனர்

கோயிலில் குரு பகவான் என்ற சன்னதி தனியாக உள்ளது. இங்கு குருபகவான் நின்று நான்கு கைகள் வைத்துக் கொண்டு ஆயுதங்கள் வைத்த நிலையில் அருளாட்சி செய்கிறார்.

சூரியன் கடவுள் சில நாட்களில், குறிப்பாக ஆவணியில்  சில தேதிகளில், பங்குனியில் சில தேதிகளில், சிவலிங்கத்தில் ஒளி விழும் வகையில் சூரிய ரேகைகள் படுகிறது

கோயிலின் விமானத்தில் சூர்யகாந்த கல்மற்றும் சந்திரகாந்த கல்என இரண்டு  கற்கள்இருப்பதால்தண்ணீர் துளி சிவலிங்கத்தின் மேல் விழுகிறது.

பாடல் பெற்ற சிவன்கோயில்களில் ஒன்றாகம்  மகா சிவராத்திரி, திருக்கார்த்திகை, குருபெயர்ச்சி சித்ராபவுர்ணமி நாட்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும் கோயிலாகும்.

 

 

 


கருத்துகள்