ராஜ ராஜன் நர்சிங் கல்லூரி திறப்பு விழா
காரைக்குடி அமராவதிபுதூரில் ராஜ ராஜன் கல்விக் குழுமத்தில் புதிய நிறுவனமாக இராஜ ராஜன் நர்சிங் கல்லூரி திறப்பு விழா நடந்தது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமை வகித்து நர்சிங் கல்லூரியை துவங்கி வைத்தார். ராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் தலைவரும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான முனைவர் சொ.சுப்பையா சிறப்புரையாற்றினார்.அவரது உரையில் கிராமப்புற மாணவர்களின் நலனுக்காகவும் அவர்களின் வாழ்வின் முன்னேற்றவும் நர்சிங் கல்லூரி ஆராம்பித்திருப்பதாக கூறினார்.
தவத்திரு குன்றக்குடி அடிகளார் சிறப்புரையாற்றுகையில் நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பயின்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பத்து ஆண்டுகள் பணிபுரிந்த டாக்டர் ராஜு அவர்கள் இங்கு நர்சிங் மாணவிகளுக்கு வகுப்புகள் எடுப்பது சிறப்புக்குரிய செயலாகும்.உயர்ந்த நோக்கில் துவங்கப்பட்ட நர்சிங் கல்லூரி சிறப்பாக செயல்பட தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்
கவிஞர் தங்கமூர்த்தி விழாவில் மிகச்சிறந்த ஆய்வக வசதிகளும் திறமையான பேராசிரியர்களும் உள்ளனர். இங்கு பயிலும் மாணவிகள் திறன்களை வளர்த்துக்கொண்டு வாழ்க்கையில் பிரகாசிக்க வேண்டுமென கூறினார். மேலும் உஞ்சனை நாட்டு அம்பலம் திரு இராமசாமி அம்பலம் வாழ்த்துரை வழங்கினார் .
இந்த நிகழ்வில் நர்சிங் கல்லூரி முதல்வர் செந்தமிழ் செல்வி வரவேற்றார்.
விழாவின் இறுதியில் முனைவர் மீனா தேவி நன்றியுரை கூறினார்.
இந்த விழா ஏற்பாடுகளை பொறியியல் கல்லூரி டீன் முனைவர் சிவக்குமார் மற்றும் துணை முதல்வர் திரு.மகாலிங்க சுரேஷ் ஆகியோர் செய்தனர்.
இந்த நிகழ்வில் தேவகோட்டை நகர மன்ற தலைவர் சுந்தரலிங்கம், காரைக்குடி மெடிக்கல் சென்டரின் மருத்துவர் பாலாஜி, பேராசிரியர் அய்யாவு, கனரா வங்கி முதன்மை மேலாளர், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர்கள், இராஜ ராஜன் கல்விக் குழுமத்தின் முதல்வர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

கருத்துகள்
கருத்துரையிடுக