காரைக்குடி
அமராவதிபுதுார் ராஜராஜன் கல்லுாரி மாணவர்கள் கால்பந்து போட்டியில் சாதனை படைத்தனர்.
அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான கால்பந்து போட்டி ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரியில் அண்மையில் நடந்தது.
இப்போட்டியில் தமிழகத்தில் உள்ள பல பொறியியல் கல்லூரிகள் கலந்து கொண்டன இதில் ஸ ராஜராஜன் பொறியியல் கல்லூரி அணி மூன்றாம் இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
ராஜராஜன் பொறியியல் கல்லூரி முதல் போட்டியில் திருச்சி ராமகிருஷ்ண கல்லூரி அணியை 3- 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்து கால் இறுதிப் போட்டியில் சென்னை சேர்ந்த ஜேப்பியார் கல்லூரி அணியை 3 - 1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
அரை இறுதி போட்டியில் அதியமான் பொறியியல் கல்லூரி அணியை எதிர்த்து விளையாடினர் இதில் 2 - 2 என்ற கோல் கணக்கில் போட்டி சமநிலையில் முடிந்தது.
இறுதியில் முதல் இடத்தை அதியமான் பொறியியல் கல்லூரியும், இரண்டாம் இடத்தை கோவை கல்லூரி அணியும், மூன்றாம் இடத்தை ஸ்ரீ ராஜ ராஜன் பொறியியல் கல்லூரி அணியும் பிடித்தது.
வெற்றி பெற்ற மாணவர்களையும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சுந்தர் ஆகியோரை அழகப்பா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுப்பையா முதல்வர் சிவக்குமார் எஸ்டிஒ பழனிவேலு ஆகியோர் பாராட்டினார்கள்.

கருத்துகள்
கருத்துரையிடுக